Friday, June 22, 2007

வந்ததும் பேசுவேன் என்றாளே!

வெகு நேரமாகியும் என்னவளைக் காணவில்லை
இன்னும் வரவில்லையோ? வந்தும் பேசவில்லையோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

வேலை அதிகமோ? வேனிற் அதிகமோ?
தலை வலியோ? "தலை"யின் வலியோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

என்னை மறந்தாளோ? எங்கும் விழுந்தாளோ?
என்னை நீங்கினாளோ? என்னுடன் நீங்கினாளோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

என்னுயிர் என்றாளே; என்னில் பாதி என்றாளே
பாதி தவிக்கிறதே; அலைப்பாய்கிறதே; அறிவாளோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

நான் உன் கண்மணி என்றாளே; கண்ணின் வலி அறிவாளோ?
அறிந்தும் அமைதி காப்பாளோ? என்ன ஆனது அவளுக்கு?
வந்ததும் பேசுவேன் என்றாளே

அவள் மனம் வேதனைப் படுகிறதோ? ஏன் என் மனம் வலிக்கிறது?
நான் வீணாய் கவலைப் படுகிறேனோ?கற்பனன செய்கிறேனோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

என்னைப் பைத்தியமாக்குவதில் சுகமோ?
அறியாமல் செய்கிறாளா? அறிந்து தான் செய்கிறாளா?
வந்ததும் பேசுவேன் என்றாளே

புலம்புகிறேனோ? இது தான் காதலோ?
அவள் பேசியதும் என் புலம்பல் நின்று விடுமோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே

பேசியதும் கோபம் வருமோ? சந்தோஷம் வருமோ?
கண்ணில் நீர் வழியுமோ? ஆனந்தத்தில் அமைதியாவேனோ?
வந்ததும் பேசுவேன் என்றாளே
-- காட்டாறு

Friday, June 15, 2007

டீக்கடைக்காரன்

காபிக் கடை
நடுநிசி
நிர்ச்சலனமான இரவு
கேலியும் கிண்டலுமாய்
மாணவர்க் கும்பல்

சர் சர் என்று
இரு கைகளுக்கிடையில்
மாறி மாறி ஓடும் டீ

தன்னிலை மறந்தவனாய்
கடமையே கர்மமாய்
காவியமாய்
அக்கணத்தில்
தெய்வமானான் அவன்!


– காட்டாறு

Tuesday, June 05, 2007

வலைப் பதிவு நண்பர்களுக்கு சொல்ல மறந்த கதை

பழையன கழிதலும் பத்தி வேலை செய்யுமிடத்தில் பேசப் போய்..... ஓடோடி.... ஓடோடி... ஓடோடி..... வந்திட்டேன் பதிவெழுத. என்னடா சம்பந்தமில்லாமல் எழுதியிருக்கிறாளே.... இவளுக்கு கழண்டுகிச்சான்னு சுத்தியும் ஆணியும் எடுத்துக் கொண்டு, ஆவலுடன் கையோங்கி வரும் என் அருமை நண்பர்களே... சற்றே பொறுங்கள். உங்கள் அன்பு கண்ணில் நீர் வர வைக்கிறது. (கை ஓங்கியவுடன் அழும் குழந்தைக்கு அடி கிடைக்காதுன்னு எனக்கு தெரியாதா என்ன? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......).

நான் சொல்ல வந்தது என்னன்னா... வேலை பார்க்கும் இடத்தில் சொன்னாங்க.... தரவுகள்(data) பத்தியும், தரவு வகைகளைப் பத்தியும் தளத்தகைத் திட்டம் (strategic plan) தீட்ட சொன்னார்கள். பழைய ஆவணங்களைத் தூக்கி பரணுல எறிய சொல்லிட்டாங்க. ஆவணங்கள் படைக்கும் போது, அது வாழ்ந்து கொண்டிருக்கும் படைப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில், மறந்து விடுவார்கள் என்று சொன்னதும்..... எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்................ வலைப் பதிவில எழுதுறதை கொஞ்ச நாள் விட்டுப்போட்டோமே..... மறுமொழி கூட எழுத நேரமில்லைன்னு இருந்து போட்டோமே............ மனுச மக்கள நெனைக்காம போய்ட்டோமே..... (என்னவொரு பாசமிருந்தா வேலை நேரத்தில கூட உங்க நெனைப்பு வந்திருக்குமின்னு பாத்துக்கோங்க!)................. கொஞ்ச நாள் பேசலைன்னா (எழுதலைன்னா), எப்படி தவித்திருப்பீங்கன்னு பொய் சொல்லாம..... நம்மள மறந்து போகாமலிருக்க (ஹி ஹி ஹி), நம்ம பாசக்கார குடும்பம் வந்து கும்மியடிக்க ஒரு பதிவை ஒன்ன எழுதிப் போட்டுறலாமின்னு ஓடி வந்ததுல....


டி


டி


டி
.
.
.
.


ந்

து

..... அட..... இருங்கப்பா.......... மூச்சி வாங்குதப்பா..... இப்பிடி மூச்சி வாங்க அதிரடியாக ஓடி வந்து சொல்ல வந்த விஷயத்த மறந்து போனதுனால..... திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கு ஓடிப் போய்.... ஞாபகம் வருதான்னு இல்லாத, இருக்குற மூளையத் திருகிப் பார்த்தா.... சும்மா ஒரு மொக்கைப் பதிவுப் போடத்தான் இந்த அவசர ஓட்டமின்னு தெரிஞ்சதும்..... அனாவசியமா ஓடி உடற்பயிற்சி செய்தோமேன்னு..... என்னையே நொந்துட்டு, உங்க கிட்டையும் வசவுகள வாங்கிட்டு..... பம்மிப் போய் உட்கார்ந்திருக்கும் அப்பாவியான நான்!