Wednesday, March 14, 2007

எப்படி முடியாது போனது உன்னால்

கருவறையிலிருந்து உதைத்து வெளி வர தெரிந்த உன்னால்.....
நடை பழகிய போது தட்டு தடுமாறி மீண்டும் எழ தெரிந்த உன்னால்.....
சைக்கிள் பயில்கையில் எத்தனை முறை கீழ் வீழ்ந்து தைரியமுடன் எழுந்தாய் நீ

தோல்விகளை சந்தித்து ஏற்ற பாதையில் முன்னேற முடிந்த உன்னால்.....
வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை நேருக்கு நேர் சந்திக்க முடிந்த உன்னால்.....
கேள்வி பல கேட்டு விதி முறைகளை மாற்ற எண்ணிய உன்னால்.....

பாழும் நீரில் மரணத்தை எதிர் கொள்ள தயங்கியது ஏனோ

உடைந்து அழும் உன் தாயுள்ளம்
வற்றிய கண்களுடன் உன் தந்தை
கண்ணிமைக்க மறந்த உன் சகோதரன்
கதறியழும் உன் சுற்றம் சூழல்

கற்றதை உணர வேண்டும் என்பாயே
மரணத்தை கற்று உறைந்து கொண்டாயோ!



-- காட்டாறு

0 பேர் மறுமொழிந்துள்ளனர்: