Friday, July 20, 2007

என்னை சேர்த்துக்க மாட்டேன்னுட்டாங்கப்பா

புகைப்பட போட்டின்னு நம்ம நட்சத்திர பதிவாளர் முத்துலெட்சுமி பதிவைப் பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன். உடனே கோதவில் இறங்க எங்கே நேரம். அதனால சமீபத்தில் எடுத்த படங்களை உங்களுக்காக இங்கே. 50 பேரு தான் பங்கேற்க முடியுமாமே.... அதனால என்ன... கலந்து கொண்டேன்னு பேர் பண்ணிக்கலாமின்னு...... ஹீ ஹீ ஹீ.




அண்ணாத்தை வீட்டின் பின்புறம் உள்ள காட்டில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். கிளிக்கிட்டேன். உதறல் கொஞ்சம் இருந்தாலும், அவரை இவ்வளவு பக்கத்தில் பார்த்த பெருமிதத்திலும் தைரியமா பக்கத்தில் போய் எடுத்த படம். கொஞ்மும் டச்சப் செய்யாமல் எடுத்தது போலவே தந்துள்ளேன். Camera -- Sony DSC F717





ஒரு மழை நாள் வீட்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தேன். மரங்கள் அசைவதும், இலைகள் பட படப்பதும் கவிதைத்துவமாக் இருந்தது. வீட்டின் முன்னுள்ள செடியில் பூத்திருந்த லில்லி மலர்கள் தேனில் தோய்த்தெடுத்த பலா பழத்தை நினைவு படுத்தின. கிடைத்த தாளில் என் கிறுக்கல்களை கிறுக்கி விட்டு, அக்கணத்தை கிளிக்கினேன். மழையாக இருந்ததால், Light effect சரியாக இல்லை. Level increase மட்டும் செய்ய வேண்டியதாகி போச்சி. வேறொரு மாற்றமும் செய்யவில்லை. Camera -- Sony DSC F717.

இன்னும் படம் வேணுமா, இதுவே போதுமா?

Thursday, July 19, 2007

பெண்ணின் நிலை

என் நண்பனிடமிருந்து ஈமெயில். 82 வயதான மூதாட்டியார் தில்லி மாநகரில் கற்பழிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு, 2 நாளில் இறந்து போனார். இது 2 வருடங்களுக்கு முந்தைய செய்தி. இது கேட்டதும் என் கண்களில் நீர். மனதில் குடைச்சல். நாம் மனிதர்கள் தானா? ஆறறிவு படைத்தவர்கள் தானா? வேலை செய்ய மனமில்லாமல், வீட்டுக்குள் ஓடி ஒளிந்தேன். என்ன ஆச்சி நம்ம மக்களுக்கு? ஏனிந்த புத்தி பேதலிப்பு? மூதாட்டியாரின் மன நிலை எவ்வாறு இருந்திருக்கும்? கேள்வி மேல் கேள்வி. மன உளச்சல்.

என் கண்முன் பற்பல காட்சிகள் வந்து போகின்றன. பல வருடங்களுக்கு முன் நடந்த கதையிது. ஆந்திராவில் நடந்தது இது. அங்கு கொத்தடிமை என்பது சர்வ சாதரணம். பல கிராமங்களில் பெண்களின் நிலை ஆண்களால் (தகப்பன் - மகள், தனையன் - தங்கை என்ற பாகுபாடின்றி) எச்சூழ்நிலையில், எவ்வாறெல்லாம் சூறாடப்படுகிறது என்பது பற்றியும், அதை ஒரு பொருட்டாக கருதாத அம்மக்கள் பற்றியும் ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. நான் பணி செய்த இடத்தில், ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, எங்களை குழுக்களாக பிரித்து, பெண்களிடன் பேசி, அவர்களின் மன புழுக்கத்தை வெளிக் கொணரவும், தற்காப்பு முறைகள் பற்றி விளக்கவும் அனுப்பினார்கள். அவர்கள் சொன்னவையாவும் பதிவில் இடமுடியாதவை. ஆனால் 82 வயது பாட்டியின் செய்தி, இந்த கிராமத்து நிலையை என் கண்முன் கொண்டு வந்ததை மறுக்க முடியாது. அப்போது இருந்த என் உள்ள வெளிப்பாடு தான் இந்த கிறுக்கல்கள்.

சமீபத்தில் என் நண்பன் 2 வயது பச்சிளம் குழந்தையை தகப்பனே கற்பழித்த கொடுமையை கூறினான். மற்றுமொரு நண்பனிடம் இது குறித்து பேசிக்கொண்டிருக்கையில், நான் அன்று (பல வருடங்களுக்கு முன்) எழுதிய மனக் குமுறலை பதிவில் எழுதும் படி பல முறை வேண்டிக் கொண்டான். அந்நண்பன் தூண்டுதலால், இன்று அவனுக்காக இப்பதிவு…… முடிந்தால் வாசிக்கவும்.

=============================================

பெண்ணின் நிலை

அழுத்திப் பிடித்து கண்ணத்தில்
முத்தம் தருவார் அடுத்த வீட்டு அண்ணா

கழுத்து துவங்கி புட்டம் வரைத் தடவி
தன் அன்பை தெரிவிப்பார் சித்தப்பா

எப்போதும் மடியிருத்தி
அணைத்துக் கொள்வார் மாமா

அடி பம்பு தண்ணியில் குளிக்கும் சாக்கில்
இடுப்புத் துணி நழுவ விடுவார் தோழியின் தந்தை

பேச்சின் நடுவில் உதட்டின் குவியலை குறிவைப்பார்
புதிதாய் திருமணமான பக்கத்து வீட்டு அக்காளின் கணவன்

முலை தடவுவதில் முன்னுரிமை
கொடுப்பார் பக்கத்து வீட்டு தாத்தா

சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து அக்குளுடன்
முலையழுத்தி இறக்கி விடுவார் ரிக்ஷாக்காரர்

இருட்டின் வெளிச்சத்தில் சன்னலோரம்
தூக்கி நிலா காண்பிப்பார் டியூசன் வாத்தியார்

இயலாத நிலையிலும்
யோனி கிழிக்க முற்படுவார் மருத்துவர்

நிலைப் படியில் பயணிப்பினும்
புட்டம் பிடிப்பர் இடி மன்னர்கள்

வேலையின் நடுவில் மார் நடுவை
அளவெடுப்பார் மானேஜர்

இது இன்றும் என்றும் தொடர் கதை
இந்த மண்ணில் பிறந்த பெண்ணின் நிலை

ஆம்! இம்மண்ணில் பெண்ணாய் பிறக்க
மாதவம் செய்ய வேண்டும்!!!!


-- காட்டாறு

Thursday, July 05, 2007

வாழ்க்கை இரசிப்பதற்கே

இன்று நண்பன் அனுப்பிய மடலைப் பார்த்ததும் ரசித்து சிரித்தேன். மக்களே, இது இரசிக்க மட்டுமே. யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். சிந்திக்க வேண்டாம். சிரித்துவிட்டு மறந்து விடுங்கள்.

இப்போ அந்த forward-லிருந்து....

Before Marriage:
============
He : Yes. At last. It was so hard to wait.

She : Do you want me to leave?

He : NO! Don't even think about it.

She : Do you love me?

He : Of course!

She : Have you ever cheated on me?

He : NO! Why you even asking?

She : Will you kiss me?

He : Yes!

She : Will you hit me?

He : No way! I'm not such kind of person!

She : Can I trust you?



Now After Marriage.........

You can read it from bottom to the top !!!!

சேதுக்கரசியாரின் தயவால்:
இங்கே பாருங்க அம்மணி :-)

Tuesday, July 03, 2007

காதலித்துப் பார்

காதலித்துப் பார்
இயற்கை அவளாவாள்; நீ அடிமையாவாய்

காதலித்துப் பார்
கண்ணுக்குள் நிழழாடுவாள்; நெஞ்சில் நடை பயிலுவாள்

காதலித்துப் பார்
அவள் கண்ணசைவில் பிரளயம் நடக்கும்; மீண்டும் பிறப்பாய்

காதலித்துப் பார்
சருகும் உயிர் பெறும்; அசையும் எப்பொருளும் அவளாவாள்

காதலித்துப் பார்
அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வரும்; இரண்டும் அவளிடம் மட்டும் வரும்

காதலித்துப் பார்
மொத்த அழகும் அவளாவாள்; இயற்கையும் சிறுமையாகும்

காதலித்துப் பார்
வயிற்றில் மின்னலடிக்கும்; நா வரளும்

காதலித்துப் பார்
அவளாசை உன்னாசையாகும்; உன் தேவை மறந்து போகும்

காதலித்துப் பார்
சொல்லெல்லாம் கவிதையாம்; சொல்லே அவள் வாய் மொழி தாம்

காதலித்துப் பார்
பேனா கிறுகிறுக்கும்; நீயும் தான்

காதலித்துப் பார்
உலகே உயர்வானதாகும்; எல்லாரும் நல்லவராவர்

காதலித்துப் பார்
நெஞ்சின் வலியும் அழகாகும்; காயமே மருந்தாகும்

காதலித்துப் பார்
எனக்குள்ள வேதனை உனக்கு புரியும்; நான் பெற்ற இன்பம் உனக்கு தெரியும்

காதலித்துப் பார்
மோட்சமடைவாய்; இறப்பாய்; மீண்டும் பிறப்பாய்
-- காட்டாறு