Wednesday, September 19, 2007

அஞ்சு வெரலும் ஒன்னாவா இருக்கு

இன்னக்கி பாருங்க.... 25 பேரு சேர்ந்து வெட்டியா ஒரு அறைக்குள்ள நின்றும், நடந்தும், உட்கார்ந்தும் கேள்வியும் பதிலுமா(இதெல்லாம் சும்மா) பேசிட்டு இருக்காங்க. கேட்டா மூளையை உபயோகிக்க சரியான நேரம் இது தான். ஒரு பிரச்சனைக்கு தீர்வு உட்கார்ந்து பேசி தீர்மானிக்கிறதாம். சரி….. ஏதோ செய்துட்டு போகட்டும். நாம மோட்டுவளைய பார்த்துட்டு உட்கார்ந்திருப்போமின்னு கலந்து கிட்டா… மோட்டுவளைய பார்க்கக் கூடாதுன்னு சட்டமின்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன செய்ய.. கையைப் பார்த்துட்டு உட்கார்ந்திருந்த வேளை… ஒரு அறிவு ஜீவி சொல்லுறாரு… எல்லாமே ஒரு காரணத்தோட தான் இருக்கும். காரணம் இல்லாது காரியம் இல்லைன்னு. அடடா... தத்துவம்... தத்துவம்...

அவ்வளவு நேரம் சும்மா இருந்த சிறு மூளை படக்குனு விழித்தெழுந்துட்டார். பெரு மூளையைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க. தூங்கிட்டு இருந்த பெரு மூளைக்கு ஒன்னும் புரியல. நம்மகிட்டேயே கேள்வியான்னு திரு திருன்னு பேய் முழி முழிக்கிறாரு. கேள்வி இது தாங்க. எதுக்காக விரல்கள் ஒவ்வொன்றும் ஒரு ஒரு சைஸ்ல இருக்குது? அதுக்கு என்ன காரணம் இருக்க முடியுமின்னு. சபாஷ் சரியான கேள்வி. ஆனா பதில்… நீங்க தாங்க நமக்கு விளக்கனும். இந்த அஞ்சி விரல் கதையை எத்தனை முறை கேட்டிருக்கோம்…. நாமே எத்தனை முறை சொல்லியிருக்கோம். அப்போல்லாம் தோனாத கேள்வி.. இன்னக்கி… தேவையா? கொஞ்ச நேரம் நானும் மூளைய சொரண்டி பார்த்தேன். அவங்கள திடீருன்னு வேலை செய்ய சொன்னா.... எப்படி செய்வாங்க… சொல்லுங்க.

நானும் கொஞ்சம் முயற்சி செய்துட்டு உங்க கிட்ட வரமின்னு......சரி… நமக்கு தெரியலைன்னா….. உடனே நம்ம குரு… ஞானி… இருக்கவே இருக்காருன்னு… 12 வயசிடம் கேட்டா… அவங்க ஒரு லுக்கு விட்டாங்களே பார்க்கனும். உனக்கு எங்கிட்ட கேள்வி கேக்குறதே வேலையாப் போச்சின்னு என்ற மாதிரி. எப்பவும் கேள்வியோட அவங்களை சந்திச்சா... பின்ன இது தானே கதி.... அவங்க உடனே அறிவி ஜீவியா… கூகிள்ல தேடினியா… அது செய்தியா.. இது செய்தியான்னு… நானோ… எனக்கு கேட்க மட்டும் தான் தெரியுங்க… நீங்க தான் பதில் எனக்கு சொல்லனுமின்னு அடம் பிடிக்க… அப்புறம் வான்னு துரத்திட்டாங்க. அவங்க அப்பாட்ட முறையிட்டா…. உன் பாடு… அவள் பாடுன்னு சொல்லிட்டு மனுஷன் எஸ்கேப்.

சரி…போன்னு விட முடியாம… ஆருயிருக்கு போன் செய்தா… கேள்வியைக் கேட்டதும்… சரிம்மா.. வீட்டுக்கு வந்ததும் பாத்திரம் கழுவித் தாரேன். அப்புறம் அந்த அறைய சுத்தம் செய்ய சொன்னியே… அதையும் செய்துறலாமின்னு சம்பந்தமில்லாம பேசுறாங்க. இது வேலைக்கு ஆகாதுன்னு நான் எஸ்கேப்.

அடுத்தது யாரிடம் கேட்பதுன்னு தெரியல… கண்முன்னாடி தெய்வம் வந்து நிக்குது. அன்னையேன்னு சரணடைஞ்றலாமின்னு கேள்வியைக் கேட்டா… அவங்க….. ஒன்னோட குசும்புக்கு அளவே இல்லாம போச்சின்னு ஒரு இடி இடிச்சிட்டு ஓடிப் போய்ட்டாங்க.

நமக்கு மண்டைக்குள்ள உள்ள குடைச்சல் நின்னாத்தானே….. உடனே ஆபத்பாந்தவனா நினைவுக்கு வந்தது நம்ம தமிழ் மண தெய்வங்கள் தான். கேள்வியை கேட்டுட்டேனப்பா… என்ன காரணத்துக்கு நம் ஐந்து விரல்களும் வெவ்வேறு அளவுல இருக்குது. பதில் சொல்லிப் போடுங்கய்யா. சரியா… என் சிற்றறிவுக்கு எட்டுற மாதிரி பதில் சொன்னீங்கன்னா…. உங்களுக்கு நம்ம பங்காளி வச்சிருக்கிற கோப்பை நிச்சயமாக பரிசாக உண்டு... உண்டு… உண்டு.

பின்குறிப்பு: (பங்காளிக்கு மட்டும்)
பங்காளி… அய்யா… ராசாத்தீ…. கால வாரிப் புடாதீக. இன்னும் கப்பு வச்சிருக்கீகல்ல. உங்களை நம்பி வாக்கு கொடுத்துட்டேன். பார்த்துக்கோங்கப்பா.

பின் வந்த பின்குறிப்பு: (வடுவூர் குமாருக்கு மட்டும்)
பங்காளி அய்யா கால வாரிட்டாகன்னா.. நீங்க பெளவுலிங் போட்டியில வாங்கின கப்பை வச்சி தனியா இருந்து என்ன செய்யப் போறீங்க.... நம்ம தமிழ் மண அறிவு கடலுக்கு பரிசா கொடுத்துருங்க. ஹி ஹி ஹி.

Saturday, September 08, 2007

கலர் பார்க்க வாரீகளா?

செப்டம்பர் போட்டி வச்சாச்சி.... கடைசி நாளும் வந்தாச்சி... காட்டாறு நானும் ஜோதியில ஐக்கியமாயாச்சி

இதோ போட்டி லிங்க்: http://photography-in-tamil.blogspot.com/2007/08/pit_30.html



வண்ண வண்ண விளையாட்டு விளையடலாம் வாங்க. புள்ளைங்க விடுமுறைல இருந்தப்போ... வா வான்னு அழைத்து... நானும் போனா.... நம்ம சைஸுக்கு..... ச்ச்ச்ச்ச்சச... இந்த பழம் புளிக்குமின்னு சுட்டுத் தள்ளிட்டு வந்திட்டேன்.




நயகரா நீர்வீழ்ச்சி.... 30 மாடி கட்டிடத்தில் இருந்து பார்த்தால், அப்படியே மெர்குரியை கொட்டிப் போட்டாற் போல் இருந்தது. சரி... புகைப் படம் எடுத்தால் எப்படியிருக்கும் எனப் பேராவல் எழ.... கிளிக்கினால்... அப்படியே... என் கண்கள் கண்ட காட்சியே... அசந்துட்டேன். வண்ணமயமாக தெரியாவிட்டாலும், போட்டிக்கு இது தான் அனுப்பவேண்டும் என மனம் ஆர்ப்பரிக்க.... இதோ உங்கள் முன்..


எனக்குப் பிடித்த சில:
கிறிஸ்தவ கோயில்களில் இது போல் கண்ணாடி பெயிண்டிங் ரொம்ப அழகா இருக்கும். எனக்கு இது மாதிரி புகைப் படம் எடுக்க ரொம்ப ஆசை. நெறையா கைவசம் இருக்குது. இது ச்சும்மா என் ஆசைக்கு.


பரிசா இதைத் தருவாங்களா? நிஜமான கார். கிறிஸ்மஸ் திருவிழா சிறப்பா கொண்டாடுவாங்க மேலை நாடுகளில். இம்முறை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த wrapping செய்யப்பட்ட சிவப்பு கார்.