Tuesday, March 27, 2007

எட்டிப்பார்க்கலாம்.... தப்பில்லை.... விளைவுகளுக்கு பொறுப்பு நீங்களே

நெஞ்சில் உரமிருந்தால் ....... தொடரவும். விளைவுகளுக்கு நீங்க... நீங்க.... நீங்க மட்டுந்தேன் பொறுப்பு.

பொன்ஸ் அவர்களுக்கு, மகளிர் சக்தியிலிருந்து நீக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துட்டு மேலே வாசிக்கவும்.
அபி அப்பா, சேதுக்கரசி, மை பிரண்டு சரவணன், கோபிநாத், தம்பி, சென்ஷி, கண்மணி யக்கோவ் (காட்டு மாட்டுத்தனமா திட்டிடீகல்ல...... கா வுடாதீக.... கு.ச்சுப்ரமணிக்கு புஸ்கோத்து வாங்கி அனுப்புறேன்), முத்துலெட்சுமி யக்கோவ் (கா வுடாதீக.... தம்பி புள்ள சைக்கிள் தூசி தட்ட தட்டாமல் வாரேன்), இன்னும் எல்லாருக்கும் ஒரு வேண்டுக்கோள். இனி என்னால நீங்க கண்கலங்காம வலம் வர என்னாலான முயற்சி எடுக்கிறேன். அதுக்கு இந்த பதிவு மட்டும் விதி விலக்கு...... அடிக்க வராதீக...... படிக்க வாங்கன்றேன்.
மங்கை, புதியவர்களை தேர்ந்தெடுத்தது உங்கள் பெருந்தன்மை. ஆனா, ஏனுங்க உங்களுக்கு என் மேல கோவம். வந்ததும் வராததுமா weirdo-வா இருக்க சொல்லுறீக. நான் என்ன பாவம்..... இல்லீங்கோ... நீங்க என்ன பாவம் செய்தீகன்னு தான் தெரியல...... பரவாயில்லை.... நீங்க பயந்து ஓட மாட்டீகன்னு நம்பிக்கையில இத தைரியமா எழுத ஆரம்பிக்கிறேன். நானே எழுதுறதோட நம்மளைப் பற்றி தெரிந்த அறிந்த நண்பர் பெருமக்களை கேட்டா எப்படியிருக்கும்னு அவுகள கேட்டா..... ரொம்பதான் கஸ்ட படுத்திபுட்டேன் போல...... எப்பப்போவ்...... அவங்க சொன்னத நான் எழுத மாட்டேன்பா. எனக்கே பயமாருக்குதுன்னா........ சரி ஓவர் பில்டப் கொடுக்காம மேட்டருக்கு வான்றீங்களா....

1) பழகுவது
குழந்தைகளிடமும், வயதில் என்னைவிட சிறியவரிகளிடமும். வயதானவர்களிடமும் வெகு சுலபமாக பழகிவிடுவேன். உடனே ஒன்னுக்குள்ள ஒன்னா ஆயிருவேன். பெரும்பாலும் குழந்தைகள் என்னை அவர்கள் வயதொத்தவர்களாகத்தான் நினைத்து பழகுவர். (அவங்க வயசுக்கு இறங்கி போறதுனால, லூசுன்னு நினைச்சி விளையாடுவாங்களோன்னு பல நாள் சந்தேகம் வரும். புறங்கையால ஒதுக்கிருவேன்ல.). பெரியவர்களோ, அவர்கள் பேத்தி/மகள் போலெண்ணி கதை பேசுவார்கள். (பெரும்பாலும் எங்க காலத்துலன்னு தான் ஆரம்பிக்கும்.... ஒருவேளை இவங்களும் அவங்க வயதொத்தவரா எண்ணுவார்களோ... ச்ச்ச்ச அதல்லாம் இருக்காது.) மேலே கூறியவை வியர்டு இல்லை. இதோ அடுத்த வரியை வாசிக்கவும். என் வயதொத்தவர்களிடம் பேசவே காசு கேட்பேன். ஹி ஹி ஹி.... நெஜமாகவேங்க.... என்னைப் பொறுத்தவரை என்னுடைய First impression is always bad impression. என்னை முதலில் பார்க்குமுன் என்னைப் பற்றித் தெரியாதிருந்தால், நான் முசுடு என்று போய்விடுவீர்கள். மூன்றாம் முறை (மெய்யாலுமே மூன்றாவது நான்காவது முறை தான்) பார்க்கையில், நீங்கள் பேசாவிட்டாலும் (நீங்க எதுக்கு முசுடு கிட்ட பேசப்போறீங்க) நானாக வந்து பேசி பழகுவேன். பேசியதும் தோழமையாகி விடுவேன். அப்புறம் என்ன ஒரு நாள் ஏனடா இவளோட போய் பேச முயற்சி பண்ணினோமுன்னு ரேஞ்சுக்கு நினைக்க வச்சுருவென். அதுவும் உங்கள்ட்ட பேசி அல்ல... உங்கள் குழந்தைகளிடம் பழகி..... ஹி ஹி ஹி ....

2) சிரிப்பு
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே(?) என்னுடைய trade mark சிரிப்பு தான். அதுவும் வாய் விட்டு சிரிப்பேன். இது எங்க வீட்ல எல்லோரும் ரொம்ப ஜாலி டைப்னால கூட இருக்கலாம். அவங்க ஜோக்கடிக்க சிரிக்க யாராவது வேண்டாமா? எனக்கு கோபம் வருவது ஆடிகொரு முறையாக இருக்கும். அப்படி கோபம் வந்தாலும் அமைதியாகிவிடுவேனே தவிர சத்தம் மட்டும் வராது. என் ஒவ்வொரு பருவத்திலேயும், சிரிக்காமல் பேச வராதா என்று யாராவது ஒருவராவது கேட்டிருப்பார்கள் என்னிடம். இது என்ன வியர்டா.... கண்மணி யக்கா பகுதிய படிக்கிறவங்க எல்லாம் ஆபிஸ், ரோடு, மாடு, மட்டின்னு கண்ட இடத்துல இருந்து சிரிக்கலயா-ன்னு கேக்குறது இங்கே வரைக்கும் கேக்குதுங்கோ. அதை விடுங்கள். இப்புடு சூடு.... இன்றும் Tom & Jerry, Woody woodpecker பார்த்தால் வாய் விட்டு சிரிப்பேன். என் தோழரின் மகன் 7 வயது சிறுவன், நான் சிரிப்பதைப் பார்த்து weirdo என்று செல்லமாகத்(? நெனைப்பு தான் எனக்கு) திட்டியிருக்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! என்னைப் பற்றி நன்கு தெரிந்த நண்பர்கள் காமெடி படத்திற்கு என்னை தியேட்டருக்கு கூட்டிச்செல்ல அவ்வளவு யோசிப்பார்கள்! யாரவது ஜோக் ஏதாவது சொல்லப்போக கொஞ்சம் டைம் கெடச்சாலும் அத நெனச்சி நெனச்சி சிரிப்பேன். திடீர் திடீருனு சிரிச்சா யாருக்கு தான் பயம் வராதுன்னு சொல்லுங்க.

3) புத்தகம் வாசிப்பது
ஆன்மீகம், தத்துவம், மித்தாலஜி (புராணக்கதைகள்), சிறுவர்க்கான படக்கதை படிக்க ரொம்பப் பிடிக்கும். ஓஷோ, ஜெட் மெக்கென்னா, வேதாத்ரி, ஜிக்கி வாசுதேவ், ஜெர்ரியோட Talking with God புடிக்கும். இதுல என்ன வியர்ட்டா இருக்குன்னு யோசிக்கிறது புரியுது. கட்டிலை சுற்றி புத்தகங்கள் குவிஞ்சு கெடந்தால் தான் தூக்கம் நன்றாக வரும். வெரைட்டியா கெடக்குமில்ல. அட்டை டு அட்டை தான் படிப்பேன்ற ரகசியத்த உங்களுக்கு மட்டும் காதுல சொல்றேன். நடுவுல உள்ளது தலைக்கு வைத்து படுத்தா தானா மனசுக்குள்ள போயிருமாமில்ல.... ஒருமுறை சொல்லாமல் என் ரூமுக்கு வந்த என் தோழி அசந்துட்டால்ல.... அவளுக்கு மயக்கம் வராத கொற தான். ஒரே தும்மல் தான் அவ கிட்டேயிருந்து. நூலக காப்பாளரே பலமுறை நீங்கள் நெஜமாகவே ஒரு வாரத்தில் இத்தனையும் படிச்சுருவீங்களான்னு கேட்ட கதையும் உண்டு. சி(ப)ல சமயம் ஒரு மாதிரியா பாத்ததும் உண்டு. பின்ன என்னங்க... லைப்ரரி போய் ஆன்மீக செக்க்ஷன் முடிஞ்சதும், குழந்தைகள் செக்க்ஷன்ல நின்னு மேய்ஞ்சிட்டு இருந்தால்..... ஏதோ வெளியில தொரத்தாம இருக்குறதுக்கு நன்றி சொல்லனும் அவங்களுக்கு.

4) Road trip (ஊர் சுற்றுறத ரீஜண்டா எழுதிருக்கிறேன்)
இந்தியால இருந்தவரைக்கும் தமிழ் நாடும், கேரளாவும், கர்னாடகாவும், அழுது பொலம்பிருக்குதுல்ல.... நான், என் தம்பிமார் 2 பேர், தோழி ஒருத்தி அப்படின்னு ஒரு கோஷ்டி போட்டுட்டு இதோ வாரோம்ன்னு கெளம்பினா, எங்க அம்மாவுக்கு தெரியும் 2 நாள் கழிச்சி தான் கோஷ்டி வந்து சேரும்ன்னு. அப்படியே செங்கோட்டை போய் கோழி வறுவல் சாப்பிட போறோம்ன்னு (இத்தனைக்கும் நான் விவேகானந்தர் பேச்சைக் கேட்டுட்டு காய் கறிக்கு மாறியிருந்த நேரமது) கெளம்பி, குற்றாலம் போய் குளியல் போட்டுட்டு, அப்படியே மதுர வந்து, அம்மாவுக்கு ஒரு போன் பண்ணி, கொடைக்கானல் போறோம் அப்படின்னு போன் பேசி வைகுறதுக்குள்ள மனசு மாறி பொள்ளாச்சி டாப் ஸ்லிப் கெளம்பி, அங்கிருந்து ஊட்டி போய்.... முது மல வழியா மைசூர் இறங்கி... இப்ப்ப்ப்ப்போ நெனச்சா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னுனுனுனுனுனுது. இதே கத நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம் நடக்கும். அமெரிக்கா வந்ததும், ஆருயிர் தோழி (அதே இந்திய குடிமகள் தான்) இருக்குமிடத்திலே வேல கிடைக்க, இப்போ புது விதமா சுத்துறோம். என்னன்னு கேக்குறீங்களா...... மயக்கம் போடாம கேட்கனும். ஒரு சாம்பிள் இங்கே. ஒரு முறை வலது புறம் மட்டும் திரும்பி ஓட்டுவோம்ன்னு திட்டம் போட்டு (!?), வட கிழக்கு மூலையிலிருந்து (மிச்சிகன் மாநிலம்) மேற்கே வந்துட்டோ ம்மில்ல (சான் பிரான்சிஸ்கோ வந்து தான் அடங்கினோம்). எடுத்துக் கொண்ட நாட்கள் அதிகமில்லை ஜெண்டில் உமன்/மேன். 5 நாட்கள் தான். அப்புறம் அங்கேயிருந்து விமானத்துல திரும்பிப் போனது வேற கத. இது மாதிரி அட்வென்சர் சுற்று பயணம் நிறைய. இதெல்லாம் சத்தியமா உன்மை. இப்போ கூட ...... சரி போதும் நிறுத்துன்னு சவுண்டு உடுறாங்கப்பா.

5) கண்டிப்பா அஞ்சாவதும் வேணுமான்னு யோசிச்சு சொல்லுங்க. இங்கிட்டு உள்ள மக்கமாரேல்லாம் பழய கத விலா வாரியா எடுத்துவுட்டு எழுத சொல்றாக. முடிவு உங்க கையில.

அப்போ வாரேன்.




பின்குறிப்பு:
இது வேறையாக்கும் புலம்பாதீக. டக்குன்னு ஒன்னே ஒன்னு சொல்லிட்டு போரேன். ரொம்ப நாளா இரண்டும், மூன்றும் எனக்கு வியர்டா தெரிஞ்சதே இல்லீங்க. ஒன்னாவது எனக்கே புரியாத புதிர். ஹி ஹி ஹி....

30 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

திஸ் இஸ் டு செர்ட்டிஃபை தட் யூ ஆர் ரியலி அ வியர்டு'ன்னு ஆரம்பிச்சு எழுதிக்
குடுத்துறட்டுமா? :-))))

said...

யக்கா மொத தரவ வந்திருக்க..... நன்றிங்கோவ். நீ என்ன சர்டிபிகெட்டுனாலும் கொடுக்கலாம். அப்பிடில்லா கொடுக்குறதுல ஆட்சேபனையில்ல எனக்கு.... அலறி அடிச்சி ஓடி போயிறாதக்கோவ்... அவ்வளவு தான் நான் கேட்டுக்கிறது.

said...

காட்டாறு,
உங்களின் பதிவின் பரபரப்பான தலைப்பைப் பார்த்துவிட்டு உள் நுழைந்தேன். இன்னும் பதிவை வாசிக்கவில்லை. வாசித்த பின்னர் மீண்டும் வருகிறேன்.
நன்றி.

said...

ஆமாம்,இதுக்கு பின்னூட்டம் போட்டா நண்பன் ஆவீங்களா? என்ற சந்தேகத்துடன்,ஆகிவிட்டால் என்ற பயமும் கூட வருகிறது.:-))
இது என்னோட வியர்டா?
நல்லா சுத்தினீங்க போங்க!

said...

//உங்களின் பதிவின் பரபரப்பான தலைப்பைப் பார்த்துவிட்டு உள் நுழைந்தேன். இன்னும் பதிவை வாசிக்கவில்லை. வாசித்த பின்னர் மீண்டும் வருகிறேன்.//

என்னங்க வெற்றி வாசிக்கிறதுக்கு முன்னே பிச்சுக்கோன்னு பறந்துட்டீங்க. மாட்டாமலா போயிருவீங்க.

//ஆமாம்,இதுக்கு பின்னூட்டம் போட்டா நண்பன் ஆவீங்களா? என்ற சந்தேகத்துடன்,ஆகிவிட்டால் என்ற பயமும் கூட வருகிறது.:-))//
குமார், நாம எல்லாருக்கும் நண்பன் தான். அதனால கவலைய வுடுங்கன்னு சொல்ல மாட்டேன். அதான் நீங்களே சொல்லிட்டீங்களே பயமாயிருக்குதுன்னு..... குமரன் நீங்க தானே சொன்னது "யாமிருக்க பயமேன்"னு...... எனக்கு ஒரு கத ஞாபகம் வருது. ராமகிருஷ்ணர் பரமஹம்சர் சொன்ன கத..... அத அப்புறமா சொல்லுறேன்.

//இது என்னோட வியர்டா?
நல்லா சுத்தினீங்க போங்க! //
வடுகப்பட்டி கூட நல்லாதான் கூகிள் மேப்புல இருந்தது. ஒரு சுத்து சுத்திருவோமா. மறக்காம புள்ள குட்டிகள கூட்டி வாங்க

said...

//அவங்க வயசுக்கு இறங்கி போறதுனால, லூசுன்னு நினைச்சி விளையாடுவாங்களோன்னு பல நாள் சந்தேகம் வரும். புறங்கையால ஒதுக்கிருவேன்ல//
ஓ லூசாறா நீங்க :))

//நண்பர்கள் காமெடி படத்திற்கு என்னை தியேட்டருக்கு கூட்டிச்செல்ல அவ்வளவு யோசிப்பார்கள்! //
என்னையும் அப்படி தாங்க ஒரு முறை ice age படத்துக்கு போயி நான் சிரிச்ச சிரிப்புல ஒரு நிமிஷம் படத்துல வருகிற கார்டூனே ஆடிப்போச்சி.

//கட்டிலை சுற்றி புத்தகங்கள் குவிஞ்சு கெடந்தால் தான் தூக்கம் நன்றாக வரும்//
அதை தலைக்கு வெச்சி படுத்து பாருங்க இன்னும் சூப்பரா தூக்கம் வரும்.

said...

//எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே//

Good..இது எல்லாம் முதலிலேயே சொல்லிப்போடோனும்..

குழந்தைகளுடன் பழகுவஹ்டு, ரோட் ட்ரிப், சிரிப்பு..மூனும் அடியேனுடன் ஒத்துப்போகுது...ஆனா புத்தகம் மட்டும்..நோ சான்ஸ்..

நம்ம பேச்ச மதிச்சு லூசானாதுக்கு நன்றிங்கோவ்...:-))

said...

ரொம்ப ஓவராத்தான் பயந்துட்டேன்..... இங்க பாருங்கன்னேன்... சந்தோசு அண்ணாச்சியும், மங்கை ஆத்தாவும் கூட்டு சேந்தாச்சில்ல...

said...

//ஓ லூசாறா நீங்க :)) //
அப்பு சந்தோசு.... நாம லூசறா ஆகும்போது குழந்தைங்க ஓட்டு மொத்தமும் நம்ம பைலதான்.

//அதை தலைக்கு வெச்சி படுத்து பாருங்க இன்னும் சூப்பரா தூக்கம் வரும்.//
தூக்கம் வருவதுக்கு தான் பாட புத்தகம் இருக்கேன்னு நெனச்சேன். இப்போ சொன்னத்துக்காக இன்னக்கி தூசி தட்டி தலையணையாக்குவது தான் வேல.

said...

ஆத்தா மங்கையம்மா, பாஸாயிட்டனா தாயீ?

said...

பாஸ் ஆகரவங்கள கூப்பிடறது நம்ம வழக்கம்..:-))

said...

//அப்பு சந்தோசு....//
அப்பு வா இல்ல சந்தோசு உனக்கு ஆப்பு அப்ப்டின்னு சொல்ல வரீங்களா? :))

said...

:))

senshe

said...

attendance onnu podukkiren. piragu varren thozhi. ;-)

said...

யப்பா.. இதுக்குத் தான் மகளிர் சக்தியெல்லாம் இழுக்கிறீங்களா.. நான் கூட என்னவோ ஏதோன்னு ஒரு செகண்டு பயந்திட்டேன்..

இத்தவுட காட்டுத்தமான வியர்டுகள்கூட இங்க இருக்காக.. இருந்தாலும் நல்லாத் தான் ஊர் சுத்துறீங்க :)) நல்லா சுத்துங்க... :-D

said...

// அப்பு வா இல்ல சந்தோசு உனக்கு ஆப்பு அப்ப்டின்னு சொல்ல வரீங்களா? :)) //

சித்த ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் போல சந்தோசு

said...

//பாஸ் ஆகரவங்கள கூப்பிடறது நம்ம வழக்கம்..:-)) //

அப்பிடி போடுடா அருவாளன்னானா

said...

//யப்பா.. இதுக்குத் தான் மகளிர் சக்தியெல்லாம் இழுக்கிறீங்களா.. நான் கூட என்னவோ ஏதோன்னு ஒரு செகண்டு பயந்திட்டேன்..
//
நம்ம பயம் நமக்குத் தானேங்க தெரியுது......

//இத்தவுட காட்டுத்தமான வியர்டுகள்கூட இங்க இருக்காக..
//
இதவுட காட்டுத்தனமான வியர்டுகள் இங்க இருக்காகன்னு சொன்னதுக்கு டாங்ஸ் சொல்றதா? இல்ல நம்பள காட்டு பயகன்னு சொல்லிட்டாகன்னு டுபுக்குன்னு போயிறதா? ஆங்ங்ங்ங்ங்ங்ங்...... நம்ம பி பாசிடிவ்...... டாங்ஸுங்க.....

//இருந்தாலும் நல்லாத் தான் ஊர் சுத்துறீங்க :)) நல்லா சுத்துங்க... :-D
//
அப்படியே கால் டாக்ஸி புடிச்சி வந்தீகன்னா..... நாம சேந்து சுத்தலாம்...... எங்கிட்டு ஓடிப் போனீக...... வருவீக.

said...

//நூலக காப்பாளரே பலமுறை நீங்கள் நெஜமாகவே ஒரு வாரத்தில் இத்தனையும் படிச்சுருவீங்களான்னு கேட்ட கதையும் உண்டு. சி(ப)ல சமயம் ஒரு மாதிரியா பாத்ததும் உண்டு.//

காட்டாறு,

அப்பிடியே எனக்கு நடந்ததை நீங்க எப்பிடி எழுதுனீங்க.... :)

//குற்றாலம் போய் குளியல் போட்டுட்டு, அப்படியே மதுர வந்து,//

அடடா பழைய ஞாபகத்தையெல்லாம் கிளறி விட்டுட்டிங்க... இந்த சீசனுக்காவது குற்றாலம் போவணும் :)))

said...

//இந்த சீசனுக்காவது குற்றாலம் போவணும் :)))
//

இராம், கண்டிப்பா போய்ட்டு வாங்க. நான் போய் 10 வருடத்திற்கும் மேலா ஆயிருச்சி.

said...

குற்றாலம் நல்லா இருக்கும். போயிட்டு வாங்க!

துணைக்கு வேணும்னா நாங்களும் வாரோம்!

said...

ஏனுங்கோ.... அருவில வர்ற ஆவியே நம்மள பயங்காட்டும்.... இதுல நீங்க வேறயா.... ஆளவிடுங்கய்யா.

said...

ஊர் சுத்தறது படிச்சுட்டு எனக்கு
பொறாமையா இருக்கு.
நானும் சுத்தறது தான் ஆனா இந்த
அளவு இங்கருந்து அங்க அங்கருந்து
அங்க ன்னு இல்ல.
ப்ளாண்டு ப்ரோக்ராம் தான்.
இப்படி அன்ப்ளாண்டா இருந்தா ஒருவிதமா
நல்லாருக்கும் போல தெரியுது...

said...

//ஊர் சுத்தறது படிச்சுட்டு எனக்கு
பொறாமையா இருக்கு.
நானும் சுத்தறது தான் ஆனா இந்த
அளவு இங்கருந்து அங்க அங்கருந்து
அங்க ன்னு இல்ல.
ப்ளாண்டு ப்ரோக்ராம் தான்.
இப்படி அன்ப்ளாண்டா இருந்தா ஒருவிதமா
நல்லாருக்கும் போல தெரியுது...

//
எனக்கே என்ன நெனச்சா சில சமயத்துல பொறாமையாத்தான் இருக்கும். ப்ளான் பண்ணி போனா சொதப்பல் தான் மிச்சமாகும். ப்ளான் இல்லாம போறது எங்க அப்பாட்ட இருந்து வந்த குணமுன்னு நெனைக்கிறேன். அவரு ரொம்ப ப்ளான் பண்ணி எல்லாம் செய்வார். ஆனா டூர்ன்னு வந்ததுன்னா... எங்கள guess பண்ண வைக்கிறதுல அவருக்கு அவ்வளவு சந்தோஷம்.

ப்ளான் பண்ணாம ஒரு முறை ஊர் சுத்திப் பாருங்களேன்!

said...

/எனக்கு கோபம் வருவது ஆடிகொரு முறையாக இருக்கும். அப்படி கோபம் வந்தாலும் அமைதியாகிவிடுவேனே ..
/
உங்களை போல உள்ளவர்களை பார்க்கிறப்ப எனக்கு வியப்பா இருக்கும்.

/குற்றாலம் போய் குளியல் போட்டுட்டு, .... முது மல வழியா மைசூர் இறங்கி ....
...(மிச்சிகன் மாநிலம்) மேற்கே வந்துட்டோ ம்மில்ல (சான் பிரான்சிஸ்கோ வந்து தான் அடங்கினோம்)./

மிச்சிகன் to சான் பிரான்சிஸ்கோ -வது பரவாயில்ல.. ஆனா,

செங்கோட்டை-லிருந்து மைசூர் trip தான் .... வாவ் ..பயங்கர 'தில்' தான்!

Anonymous said...

suspense வைச்சு எழுதுவதில் நீங்கள் கில்லாடிதான்

said...

//உங்களை போல உள்ளவர்களை பார்க்கிறப்ப எனக்கு வியப்பா இருக்கும்.
//
தென்றல், இதுல வியப்பொன்னும் இல்லைங்க. அநாவசியமா நாமும் டென்சன் ஆகி, அடுத்தவங்களியும் டென்சன் ஆக்கனும்னு நெனச்சுப்பேன். அப்புறம் கோபம் எங்கோ பறந்து போயிடும்.

உங்கள் பாராட்டுக்கு நன்றி

said...

//suspense வைச்சு எழுதுவதில் நீங்கள் கில்லாடிதான் //
துர்கா, உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த மறுமொழி இந்த பதிவிற்கு தானா அம்மணி?

said...

கொஞ்ச நாள் விடுமுறைல போயிட்டு வரலாம்னா.. அதுக்குள்ள என் தலையையும் உருட்டியிருவீங்களே? :-)

said...

//சேதுக்கரசி said...
கொஞ்ச நாள் விடுமுறைல போயிட்டு வரலாம்னா.. அதுக்குள்ள என் தலையையும் உருட்டியிருவீங்களே? :-)
//
கலக்கிட்டீங்க போங்க.... விடுமுறையிலிருந்து வந்ததும் மறுமொழியூட்ட வந்தமைக்கு நன்றி! உங்களுடைய சின்சியாரிட்டியை என்னென்பது. விடுமுறை இனிதே களி(ழி)த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
:)