Wednesday, November 14, 2007

இயற்கை சிற்பி நீ யாரோ

இயற்கை சிற்பி நீ யாரோ

கொஞ்சும் கிளியும்
பகையின் பருந்தும்
மருண்ட மானும்
வீருகொண்ட சிங்கமும்
மிரட்டலாய் ஒரு சேர உலவவிட்ட நீ யாரோ

கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட
தலையாட்டி கிளையாட
காற்று வந்து இன்னிசை பாட
கொள்ளை மனதை ஆட்டிவைக்கும் நீ யாரோ

மயக்கும் பச்சை புல்வெளியழகும்
சல சலக்கும் அருவியழகும்
ஒய்யார மலையழகும்
மூங்கில் இசையழகும்
காட்டில் ஒரு சேர தந்த அழகன் நீ யாரோ

பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ

மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்
நாளும் மாறும் காட்சிதனை தீரஅமைக்கும் நீ யாரோ
-- காட்டாறு

17 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

\\\கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட\\\

யாரு?...நானா..சொல்லீறு ஒழுங்கா

Anonymous said...

//\\கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட\\\

yo..yaarai solluringanu ennakum theriyanum

Anonymous said...

///காட்டில் ஒரு சேர தந்த அழகன் நீ யாரோ///

yaarunu neegale sollidunga yakka

Anonymous said...

//மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்
நாளும் மாறும் காட்சிதனை தீரஅமைக்கும் நீ யாரோ
//

super lines yakkov.ippothaan yaarunu ennaku puriyuthu :P

said...

இது..இது..இதுதான் காட்டாறுங்கிறது :)

\\பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ\\

அழகான வரிகள்...சூப்பர் கவிதை ;)

said...

நல்ல கவிதை. உரை வீச்சு நன்றாக உள்ளது. காட்டாறுக்கு கண்டிப்பாக அணையோ தடையோ கிடையாது. ஜமாய்ங்க.

said...

//துர்கா|thurgah said...
super lines yakkov.ippothaan yaarunu ennaku puriyuthu :P
//

சின்ன பொண்ணு துர்காவுக்கே புரிஞ்சிட்டதால... யாரை பத்தி சொல்லியிருக்கேன்னு இங்கே சொல்லல... ;-)

சரிம்மா துர்கா.... என் காதிலே மட்டும் சொல்லு... யாரை பத்தி இந்த கவுஜைல இருக்குதுன்னு?

said...

//கோபிநாத் said...
இது..இது..இதுதான் காட்டாறுங்கிறது :)
//

இது!

said...

//வித்யா கலைவாணி said...
நல்ல கவிதை. உரை வீச்சு நன்றாக உள்ளது. காட்டாறுக்கு கண்டிப்பாக அணையோ தடையோ கிடையாது. ஜமாய்ங்க.
//

முத தபா வந்துருக்கீங்க.. வாங்க வரவேற்கிறோம்.

இந்த உரை வீச்சுன்னு என்னவோ சொல்லுறீங்களே தாயீ அதெல்லாம் நமக்கு புரியாத விஷயந்தாயீ...

said...

//மங்கை said...
\\\கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட\\\

யாரு?...நானா..சொல்லீறு ஒழுங்கா
//

இதெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியுமா? ;-)

said...

//துர்கா|thurgah said...
//\\கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட\\\

yo..yaarai solluringanu ennakum theriyanum
//

கண்டிப்பா நான் இல்ல ராசாத்தீ.... ;-)

said...

மறுபடியும் கவுஜு.. ஒரு முடிவோட தான் வந்து இருக்கீங்க போல...

ஆனாலும் நல்லா இருக்கு....

said...

Ipaadi aenga vaikum avar yaaro !
TC
CU

said...

//மங்கை said...
\\\கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட\\\

யாரு?...நானா..சொல்லீறு ஒழுங்கா//

அக்கா! இது உங்க கமெண்டா...
ஆஹா அக்காவும் ஆரம்பிச்சுட்டாங்களே! :))))

said...

இந்த கவிதையில அழகான நடையும், அதுல அமைஞ்சிருக்கற அல்லது சேந்துருக்கற இசை நயமும் ரொம்ப நல்லாயிருக்கு..

சினிமாக்காரங்க பாஷையில சொன்னா பாட்டாப்பாட அங்கங்க கொஞ்சம் மீட்டர் இடிக்குது :) (இது என் டிஸ்கி: சும்மா சொன்னேன்)

//மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்//

இந்த வரி உண்மையிலேயே ரொம்ப பிடிச்சிருக்குது.. ஆனா இத விடவும்,

//பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ//

இது ஏ‍ ஓன்...

புதுசா நான் வேற என்னத்த சொல்லப்போறேன்..

//வித்யா கலைவாணி said...
நல்ல கவிதை. உரை வீச்சு நன்றாக உள்ளது. காட்டாறுக்கு கண்டிப்பாக அணையோ தடையோ கிடையாது. ஜமாய்ங்க.//

ஒரு பெர்ர்ர்ரிய ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிப்ப்ப்ப்ப்ப்ப்பீட்டேஏஏஏஏஏஏஏஏ :))))

said...

//நாகை சிவா said...
ஆனாலும் நல்லா இருக்கு....
//
நன்றி சிவா. :)


//Compassion Unlimitted said...
Ipaadi aenga vaikum avar yaaro !
TC
CU
//

முதல் முறையா வந்திருக்கீங்க. வாங்க வாங்க.
அவர் யாருன்னு தெரியிறது இருக்கட்டும்... இந்த கோட் வார்த்தைகளுக்கு(TC, CU) அர்த்தம் என்னாங்கோவ்? Take care, See you ஆ?

said...

//சென்ஷி said...
இந்த கவிதையில அழகான நடையும், அதுல அமைஞ்சிருக்கற அல்லது சேந்துருக்கற இசை நயமும் ரொம்ப நல்லாயிருக்கு..

சினிமாக்காரங்க பாஷையில சொன்னா பாட்டாப்பாட அங்கங்க கொஞ்சம் மீட்டர் இடிக்குது :) (இது என் டிஸ்கி: சும்மா சொன்னேன்)
//

சென்ஷி, உங்க மறுமொழி ரொம்ப நல்லாயிருக்குது. மீட்டர் இடிக்காம சொல்லியிருக்கீங்க. ;-)

உங்க traditional ரிப்பீட்டேய் போடலையோன்னு கீழே பார்த்தா.....ஆஆஆஆஆஆ.....